ஆசிரியர்கள் நியமனத்தின் போது குற்றப்பின்னணியை விசாரிக்க ஐகோர்ட் அறிவுரை
ஆசிரியர்கள் நியமனத்தின் போது குற்றப்பின்னணியை விசாரிக்க ஐகோர்ட் அறிவுரை
ஆசிரியர்கள் நியமனத்தின் போது குற்றப்பின்னணியை விசாரிக்க ஐகோர்ட் அறிவுரை
UPDATED : நவ 13, 2024 12:00 AM
ADDED : நவ 13, 2024 04:52 PM

சென்னை:
ஆசிரியர்கள் நியமனத்தின் போது, அவர்களுக்கு குற்றப் பின்னணி உள்ளதா என்பதை ஏன் விசாரிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து அரசு முடிவெடுக்கவும் அறிவுறுத்தியது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் நியமனத்திற்கு தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயம்; 2012 முதல் இது அமலில் உள்ளது.
தகுதித்தேர்வில் தேர்ச்சியானவர்களுக்கு போட்டித்தேர்வு நடத்தி, அதன் வாயிலாக தேர்வு செய்யும் வகையில், 2018ல் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. போட்டித்தேர்வு கூடாது என்று வழக்கில் வலியுறுத்தப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி அடங்கியஅமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம், வழக்கறிஞர் கவிதா ராமேஸ்வர் ஆஜராகினர். அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் நீலகண்டன், சிறப்பு பிளீடர் யு.எம்.ரவிச்சந்திரன் ஆகியோர் ஆஜராகினர்.
வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதா என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, பதில் மனு தாக்கல் செய்வதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பதில் மனு தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை, வரும் 26க்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
விசாரணையின்போது, அட்வகேட் ஜெனரலிடம், நீதிபதிகள் கூறியதாவது:
ஆசிரியர்களுக்கு எதிரான வழக்குகள் தொடர்பாக, பத்திரிகைகளில் அடிக்கடி செய்தி வெளியாகி வருகின்றது. இன்று கூட, ஒரு பள்ளி ஆசிரியருக்கு எதிரான வழக்கு குறித்து செய்தி வெளியாகி உள்ளது.
ஆசிரியர்கள் நியமனத்தின்போது, அவர்களின் குற்றப் பின்னணியை ஏன் நீங்கள் சரிபார்க்கக் கூடாது; இதுகுறித்து, அரசு முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து, கூடுதல் அட்வகேட் ஜெனரல் நீலகண்டன், தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களிடம், அவர்கள் மீதான வழக்கு விபரங்களை தேர்வு வாரியம் கேட்கிறது என்றார்.
அதற்கு நீதிபதிகள், போலீஸ் பணியில் சேருவதற்கு முன், அவர்களுக்கு எதிராக வழக்குகள் உள்ளனவா என்பது குறித்து விசாரணை நடக்கிறது. வழக்கறிஞர் பதிவின் போதும், போலீஸ் வாயிலாக விசாரணை நடக்கிறது.
அதுபோல, ஆசிரியர்களாக தேர்வு செய்யப்படுவோருக்கு எதிராக வழக்குகள் உள்ளனவா என்பது குறித்து, போலீஸ் வாயிலாக ஏன் விசாரிக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து அரசு முடிவெடுக்கவும், நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
ஆசிரியர்கள் நியமனத்தின் போது, அவர்களுக்கு குற்றப் பின்னணி உள்ளதா என்பதை ஏன் விசாரிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து அரசு முடிவெடுக்கவும் அறிவுறுத்தியது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் நியமனத்திற்கு தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயம்; 2012 முதல் இது அமலில் உள்ளது.
தகுதித்தேர்வில் தேர்ச்சியானவர்களுக்கு போட்டித்தேர்வு நடத்தி, அதன் வாயிலாக தேர்வு செய்யும் வகையில், 2018ல் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. போட்டித்தேர்வு கூடாது என்று வழக்கில் வலியுறுத்தப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி அடங்கியஅமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம், வழக்கறிஞர் கவிதா ராமேஸ்வர் ஆஜராகினர். அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் நீலகண்டன், சிறப்பு பிளீடர் யு.எம்.ரவிச்சந்திரன் ஆகியோர் ஆஜராகினர்.
வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதா என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, பதில் மனு தாக்கல் செய்வதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பதில் மனு தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை, வரும் 26க்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
விசாரணையின்போது, அட்வகேட் ஜெனரலிடம், நீதிபதிகள் கூறியதாவது:
ஆசிரியர்களுக்கு எதிரான வழக்குகள் தொடர்பாக, பத்திரிகைகளில் அடிக்கடி செய்தி வெளியாகி வருகின்றது. இன்று கூட, ஒரு பள்ளி ஆசிரியருக்கு எதிரான வழக்கு குறித்து செய்தி வெளியாகி உள்ளது.
ஆசிரியர்கள் நியமனத்தின்போது, அவர்களின் குற்றப் பின்னணியை ஏன் நீங்கள் சரிபார்க்கக் கூடாது; இதுகுறித்து, அரசு முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து, கூடுதல் அட்வகேட் ஜெனரல் நீலகண்டன், தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களிடம், அவர்கள் மீதான வழக்கு விபரங்களை தேர்வு வாரியம் கேட்கிறது என்றார்.
அதற்கு நீதிபதிகள், போலீஸ் பணியில் சேருவதற்கு முன், அவர்களுக்கு எதிராக வழக்குகள் உள்ளனவா என்பது குறித்து விசாரணை நடக்கிறது. வழக்கறிஞர் பதிவின் போதும், போலீஸ் வாயிலாக விசாரணை நடக்கிறது.
அதுபோல, ஆசிரியர்களாக தேர்வு செய்யப்படுவோருக்கு எதிராக வழக்குகள் உள்ளனவா என்பது குறித்து, போலீஸ் வாயிலாக ஏன் விசாரிக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து அரசு முடிவெடுக்கவும், நீதிபதிகள் அறிவுறுத்தினர்.