Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்டம் ரிசல்ட்டில் கணினி அறிவியல் முன்னிலை

சென்டம் ரிசல்ட்டில் கணினி அறிவியல் முன்னிலை

சென்டம் ரிசல்ட்டில் கணினி அறிவியல் முன்னிலை

சென்டம் ரிசல்ட்டில் கணினி அறிவியல் முன்னிலை

UPDATED : மே 16, 2024 12:00 AMADDED : மே 16, 2024 10:51 AM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி :
கோவை மாவட்டத்தில்,பிளஸ் 1 பொதுத் தேர்வில் கணினிஅறிவியல் பாடத்தில்,364 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

இப்பாடத்தில், தோல்வியடைந்த மாணவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது. கோவை மாவட்டத்தில், பிளஸ் 1 வகுப்பில் பாடவாரியான தேர்ச்சி முடிவுகளில் கணினி அறிவியலில்,364 பேர் சென்டம் பெற்றுள்ளனர்.

பொருளாதாரத்தில் 91 பேரும், வணிகவியலில் 61 பேரும், இயற்பியலில் 47 பேரும், கணக்கு மற்றும் கணக்குப் பதிவியலில் 37 பேரும், மொழிப் பாடத்தில்36 பேரும், வேதியியலில்17 பேரும் பிற பாடங்களிலும் மொத்தம், 1,323 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

சென்டம்பள்ளிகள்:
கோவை மாவட்டத்தில்,478 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள்,பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதினர். இதில், 12 அரசுப் பள்ளிகள், 6 அரசு உதவிபெறும் பள்ளிகள், 119 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம்,137 பள்ளிகள்,100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

கல்வியாளர்கள் கூறுகையில், மாணவர்களுக்கு உயர் கல்வியில் கணினி மீதுள்ள ஆர்வத்தால், மேல்நிலைக்கல்வியில், அப்பாடப்பிரிவை தேர்வு செய்து படிக்கின்றனர், என்றனர்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us