Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு 8ம் தேதி துவக்கம்

ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு 8ம் தேதி துவக்கம்

ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு 8ம் தேதி துவக்கம்

ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு 8ம் தேதி துவக்கம்

UPDATED : செப் 25, 2024 12:00 AMADDED : செப் 25, 2024 08:29 AM


Google News
புதுச்சேரி :
புதிதாக தேர்வான 140 ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி வரும் 8ம் தேதி துவங்குகிறது.

இதுகுறித்து புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


காரைக்கால், மாகி தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணிக்கு தேர்வான 140 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி வரும் 8ம் தேதி காலை 10:00 மணிக்கு துவங்கி 10ம் தேதி வரை நடக்கிறது. இதில் உரிய அசல் சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும்.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர்கள், சான்றிதழ்களை சமர்பிக்காதவர்களின் தேர்வு ரத்து செய்யப்படும். அசல் சான்றிதழ் சமர்ப்பிக்க கால நீட்டிப்பு வழங்கப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us