Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.ஆர்க்., கவுன்சிலிங் விண்ணப்பிக்கும் அவகாசம் ஜூலை 31ல் நிறைவு

பி.ஆர்க்., கவுன்சிலிங் விண்ணப்பிக்கும் அவகாசம் ஜூலை 31ல் நிறைவு

பி.ஆர்க்., கவுன்சிலிங் விண்ணப்பிக்கும் அவகாசம் ஜூலை 31ல் நிறைவு

பி.ஆர்க்., கவுன்சிலிங் விண்ணப்பிக்கும் அவகாசம் ஜூலை 31ல் நிறைவு

UPDATED : ஜூலை 19, 2024 12:00 AMADDED : ஜூலை 19, 2024 10:40 AM


Google News
Latest Tamil News
சென்னை:
பி.ஆர்க்., கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான விண்ணப்பப் பதிவு ஜூலை 31ம் தேதி நிறைவடையும் என தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலையின் இணைப்பில் 45க்கும் மேற்பட்ட கட்டட அமைப்பியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில் பி.ஆர்க்., மற்றும் எம்.ஆர்க்., படிப்புகள் நடத்தப்படுகின்றன. ஐந்து ஆண்டுகள் நடத்தப்படும் இந்த படிப்பில் முதலாம் ஆண்டு சேர்க்கை, தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி வழியே மேற்கொள்ளப்படுகிறது.

இந்த ஆண்டு கவுன்சிலிங்குக்கு https://barch.tneaonline.org/ என்ற இணையதளத்தில் மே மாதம் முதல் பதிவு துவங்கியது. ஜூலை 31ம் தேதியுடன் விண்ணப்பப் பதிவு நிறைவடையும் என தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி அறிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us