Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அகடமியா என்னெக்ஸ்டி: முதலாவது தேசிய மாநாடு

அகடமியா என்னெக்ஸ்டி: முதலாவது தேசிய மாநாடு

அகடமியா என்னெக்ஸ்டி: முதலாவது தேசிய மாநாடு

அகடமியா என்னெக்ஸ்டி: முதலாவது தேசிய மாநாடு

UPDATED : மார் 27, 2024 12:00 AMADDED : மார் 27, 2024 06:16 PM


Google News
Latest Tamil News
சென்னை:
கல்வித் தலைவர்களுக்கான வடிவமைப்பு சிந்தனை பற்றிய 1வது தேசிய மாநாடு சென்னையில் நடைபெற்றது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் (ஏஐசிடிஇ) தலைவர் பேராசிரியர் சீத்தாராம் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.கல்வித்துறையில் மாற்றத்தை ஏற்படுத்த, ஸ்கூல் ஆப் டிசைன் திங்கிங் (எஸ்ஓடிடி) மற்றும் இன்டலெக்ட் இணைந்து இன்று சென்னையில் உள்ள 8012 பின் டெக் வடிவமைப்பு மையத்தில் (உலகின் முதல் உருமாற்ற மையம்) கல்வித் தலைவர்களுக்கான வடிவமைப்பு சிந்தனை பற்றிய முதல் தேசிய மாநாட்டை நடத்தியது. மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சியாக, வரவிருக்கும் சவால்கள் மற்றும் வாய்ப்புகளை எதிர்கொள்ள மாணவர்களைத் தயார்படுத்துவதற்காக, டேலண்ட் 2040 என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டது.டேலண்ட் 2040 எதிர்காலத்தின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப கல்வி நிறுவனங்களை மாற்றுவதில் கவனம் செலுத்துகிறது. இந்த கனவை நனவாக்க, கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளார்கள் என இந்த மாற்றத்தை அடைய ஒன்றிணைந்து செயல்பட வைக்க உதவுகிறது. மாணவர்களின் குழுவிற்கு வழிகாட்டும் ஆசிரிய உறுப்பினர்களைக் கொண்ட ஒரு நிறுவனத்தை உள்ளடக்கியது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் (ஏஐசிடிஇ) தலைவர் பேராசிரியர் சீத்தாராம் பேசுகையில், நாம் தற்போது புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் சகாப்தத்தில் இருக்கிறோம், மேலும் புதுமை மற்றும் தொழில்முனைவு துறைகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. புதுமை, ஒத்துழைப்பு மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றம், தொழில்நுட்ப நிறுவனங்களிடையே வடிவமைப்பு சிந்தனையை ஊக்குவிப்பதே ஏஐசிடிஇ முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. இந்த நிகழ்வின் மூலம், கல்வியாளர்கள் கல்வியின் எதிர்காலத்தை வடிவமைக்க முடியும் மற்றும் அவர்களின் நிறுவனங்களில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும், என்றார்.நிகழ்ச்சியில் இன்டலெக்டின் சிஎம்டி மற்றும் ஸ்கூல் ஆப் டிசைன் திங்கிங் நிறுவனர் அருண் ஜெயின், ஸ்கூல் ஆப் டிசைன் திங்கிங் தலைவர் மற்றும் இன்டலெக்டின் தலைமை வடிவமைப்பு அதிகாரி அன்புரத்தினவேல், ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us