Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு 39 ஆயிரத்து 433 பேர் பங்கேற்பு

பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு 39 ஆயிரத்து 433 பேர் பங்கேற்பு

பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு 39 ஆயிரத்து 433 பேர் பங்கேற்பு

பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு 39 ஆயிரத்து 433 பேர் பங்கேற்பு

UPDATED : பிப் 25, 2025 12:00 AMADDED : பிப் 25, 2025 09:38 AM


Google News
Latest Tamil News
கோவை: கோவை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வை, 39 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, பிளஸ்2 வகுப்புக்கு மார்ச், 3 முதல், 25ம் தேதி வரையும், பிளஸ்1 வகுப்புக்கு மார்ச், 5 முதல், 27 வரையும், 10ம் வகுப்புக்கு மார்ச், 28 முதல் ஏப்., 15ம் தேதி வரையும் நடக்கிறது.

முன்னதாக, பிளஸ்1, பிளஸ்2 வகுப்புகளுக்கு, கடந்த, 7 முதல், 14ம் தேதி வரை செய்முறை தேர்வு நடந்தது. பிளஸ்1 வகுப்பில், 36 ஆயிரத்து, 664 பேரும், பிளஸ்2 வகுப்பில், 35 ஆயிரத்து, 999 பேரும் தேர்வு எழுதினர். பத்தாம் வகுப்புக்கு நேற்று செய்முறை தேர்வு துவங்கியது.

வரும், 28ம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில், 518 பள்ளிகளில், 39 ஆயிரத்து, 433 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து காலை, மதியம் என இரு சுழற்சியில் தேர்வு நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us