ஆப்பரேஷன் சிந்துார் அதிரடியில் பலியான பயங்கரவாதிகள் யார்?
ஆப்பரேஷன் சிந்துார் அதிரடியில் பலியான பயங்கரவாதிகள் யார்?
ஆப்பரேஷன் சிந்துார் அதிரடியில் பலியான பயங்கரவாதிகள் யார்?

ஹபீஸ் முகமது ஜமீல்
ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் மூத்த மைத்துனர். பஹவல்பூர் பயங்கரவாத முகாமின் தலைமை பொறுப்பு வகித்தவர். அமைப்புக்கு நிதி திரட்டுதல், இளைஞர்களை மூளைச்சலவை செய்வது இவரின் பங்கு.
முகமது யூசுப் அசார்
பயங்கரவாதி மசூத் அசாரின் மற்றொரு மைத்துனர்; 1999ல் காந்தகார் விமான கடத்தல் வழக்கில் தேடப்பட்டவர்.
முத்தசார் காதியன் காஸ்
லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைமையகம் தான் முரிட்கே. இந்திய - பாக்., எல்லையில் இருந்து 25 கி.மீ., தொலைவில் உள்ளது. இந்த முகாமின் தலைவராக செயல்பட்டவர்.
காலித்
லஷ்கர் - இ -தொய்பா பயங்கரவாதி. ஜம்மு - காஷ்மீரில் பல பயங்கர வாத தாக்குதல்களில் தொடர்புடையவர். பைசாலாபாதில் நடந்த இவரது இறுதி ஊர்வலத்தில் ராணுவம், போலீஸ், அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
முகமது ஹாசன் கான்
ஜெய்ஷ் - இ -முகமது பயங்கரவாத அமைப்பின் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் கமாண்டர் முப்தி அஸ்கார் கானின் மகன். காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒருங்கிணைத்தது, சதித்திட்டம் தீட்டியது இவரது பணி.