Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு; பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை

காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு; பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை

காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு; பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை

காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு; பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை

ADDED : அக் 14, 2025 08:57 AM


Google News
Latest Tamil News
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் 2 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். இதைக் கண்டறிந்த ராணுவத்தினர் எச்சரித்தும் அவர்கள் கேட்கவில்லை. அவர்களின் ஊடுருவலை தடுக்கும் முயற்சிகளில் பாதுகாப்பு படையினர் இறங்கினர்.

பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு பயங்கரவாதிகளும் துப்பாக்கியால் சுட்டனர். இருதரப்புக்கும் இடையே சண்டை நீண்ட நேரம் நீடித்தது. பின்னர் நீண்ட நேரம் போராடி ஊடுருவல் முயற்சியை பாதுகாப்பு படையினர் முறியடித்தனர். அப்போது பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மேலும் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என பாதுகாப்பு படையினர் சந்தேகப்படுகின்றனர். எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளின் சதி செயலை முறியடிக்க உஷார்ப்படுத்தப்பட்டு உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us