Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/காஷ்மீரில் பாக்., நடத்திய தாக்குதலில் அரசு அதிகாரி பலி

காஷ்மீரில் பாக்., நடத்திய தாக்குதலில் அரசு அதிகாரி பலி

காஷ்மீரில் பாக்., நடத்திய தாக்குதலில் அரசு அதிகாரி பலி

காஷ்மீரில் பாக்., நடத்திய தாக்குதலில் அரசு அதிகாரி பலி

UPDATED : மே 10, 2025 07:13 PMADDED : மே 10, 2025 07:20 AM


Google News
Latest Tamil News
ஜம்மு: ஜம்மு - காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், பொதுமக்கள் இருவர் பலியாயினர்; 6 பேர் காயமடைந்தனர்.

எல்லையில், பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தியது. காஷ்மீரில் உரி பகுதியில் ஒருவரும், பூஞ்ச்சில் ஒருவரும், பாக்., தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர். வீடுகள் பலவும், தாக்குதலில் பலத்த சேதம் அடைந்துள்ளன.

பாரமுல்லா மாட்டம் உரி பகுதியில் நர்கிஸ் பானு (45), பாக்., தாக்குதலுக்கு பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அதிகாரி உயிரிழப்பு:


ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்ட வளர்ச்சி அதிகாரி ராஜ்குமார் தாப்பா உயிரிழந்தார். இதனை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பதிவு செய்துள்ளார். அவர் நேற்று நடந்த ஆன்லைன் கான்பரன்ஸ் கூட்டத்தில் பங்கேற்றதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us