Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/இது முடிவின் ஆரம்பம்... 2026க்குள் மாவோயிஸ்டுகளுக்கு முடிவு கட்டுவோம்; அமித்ஷா

இது முடிவின் ஆரம்பம்... 2026க்குள் மாவோயிஸ்டுகளுக்கு முடிவு கட்டுவோம்; அமித்ஷா

இது முடிவின் ஆரம்பம்... 2026க்குள் மாவோயிஸ்டுகளுக்கு முடிவு கட்டுவோம்; அமித்ஷா

இது முடிவின் ஆரம்பம்... 2026க்குள் மாவோயிஸ்டுகளுக்கு முடிவு கட்டுவோம்; அமித்ஷா

UPDATED : மே 15, 2025 07:32 AMADDED : மே 14, 2025 10:31 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள கரேகுட்டா மலையில் மூவர்ணக் கொடி பறப்பது மகிழ்ச்சியளிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

கரேகுட்டா மலைத்தொடர் பிஜாப்பூர் மாவட்டத்தில் இருக்கிறது. ஏப்.21ம் தேதி முதல் அங்கு மாவோயிஸ்ட் ஒழிப்பு நடவடிக்கை (ஆபரேஷன் சங்கல்ப்) தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரையில் 31 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இது குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியதாவது; இந்த மலையில் ஒரு சமயத்தில் சிவப்பு பயங்கரவாதம் கோலோச்சி இருந்தது. தற்போது, மூவர்ணம் பறப்பது பெருமையளிக்கிறது. வரும் 2026 மார்ச்ச மாதத்திற்குள் மாவோயிசத்தை அழிக்க அரசு உறுதி பூண்டுள்ளது.

மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான இந்த நடவடிக்கையை நமது படைகளால் வெறும் 21 நாட்களுக்குள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆபரேஷனில் எந்த வீரருக்கும் பாதிப்பில்லாதது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாங்கள் திட்டமிட்டதை விட மிக அதிகமாகவே செய்து முடித்துள்ளோம். இதனால், நாங்கள் நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறோம். இது முடிவின் ஆரம்பம், 2026 மார்ச் 31க்குள் மாவோயிசத்தை ஒழிக்கும் இலக்கை அடைவோம், எனக் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us