Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ தமிழகம் அனுபவிக்கிறது!

தமிழகம் அனுபவிக்கிறது!

தமிழகம் அனுபவிக்கிறது!

தமிழகம் அனுபவிக்கிறது!

ADDED : ஜூன் 28, 2025 01:01 AM


Google News
Latest Tamil News
கடலில், இலங்கை எல்லையில் உள்ள சில பகுதிகளுக்குள் சென்று நம் மீனவர்கள் மீன் பிடிக்கலாம் என, ஒப்பந்தம் இருந்தது. ஆனால், எமர்ஜென்சி காலத்தில், அந்த ஒப்பந்த உரிமைகள் கைவிடப்பட்டன. இதனால், நம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். இதற்கான விளைவுகளை தமிழகம் இன்னும் அனுபவித்து வருகிறது.

ஜெய்சங்கர், வெளியுறவு அமைச்சர், பா.ஜ.,

துாதரக உறவு மோசம்!


கடந்த 50 ஆண்டுகளுக்கு முன், எமர்ஜென்சி காலத்தில் நடந்ததை பற்றி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசுவதால் எதுவும் நடக்கப் போவதில்லை. நம் நாட்டின் துாதரக உறவு கடந்த இரு வாரங்களில் மோசமாக உள்ளது. எமர்ஜென்சியை விட்டுவிட்டு, துாதரக உறவை சரி செய்வதில் அமைச்சர் ஜெய்சங்கர் கவனம் செலுத்த வேண்டும்.

கபில் சிபல், ராஜ்யசபா எம்.பி., - சுயேச்சை

கல்வித்தரம் மேம்படும்!


பீஹாரில் வறுமை, வேலையின்மையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒரே வழி கல்வி தான். 30 ஆண்டுகளுக்கும் மேல் மாறி மாறி ஆட்சி செய்த லாலு பிரசாத், நிதிஷ் குமார் ஆகியோர், பீஹாரை தொழிலாளர்களின் மாநிலமாக மாற்றிவிட்டனர். இனி அது தொடராது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மாணவர்களின் கல்வித்தரம் மேம்படும்; வேலைவாய்ப்பு பெருகும்.

பிரசாந்த் கிஷோர், தலைவர், ஜன் சுராஜ்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us