10 ஆண்டு பழைய வாகனங்களுக்கான தடைக்கு வலுக்கும் எதிர்ப்பு!: போராட்டத்தை முன்னெடுக்க டில்லி மக்கள் முடிவு
10 ஆண்டு பழைய வாகனங்களுக்கான தடைக்கு வலுக்கும் எதிர்ப்பு!: போராட்டத்தை முன்னெடுக்க டில்லி மக்கள் முடிவு
10 ஆண்டு பழைய வாகனங்களுக்கான தடைக்கு வலுக்கும் எதிர்ப்பு!: போராட்டத்தை முன்னெடுக்க டில்லி மக்கள் முடிவு

உத்தரவு
அந்த வகையில், டில்லியில் இயங்கும், 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க பெட்ரோல் பங்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நோட்டீஸ்
இது மட்டுமின்றி, ஆர்.டி.ஓ., அலுவலக உதவியுடன், 15 ஆண்டுகள் பழமையான வாகன உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தடை உத்தரவு அமலுக்கு வந்த நேற்று முன்தினம் மட்டும் 80 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இரண்டாவது நாளான நேற்று, 165 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஏன் இந்த அவசரம்?
டில்லியில் உள்ள பெரும்பாலான மக்கள் அலுவலகங்களுக்கு செல்ல தங்கள் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துகின்றனர். இந்த உத்தரவால், அவர்கள் இப்போது என்ன செய்வார்கள்? பல மூத்த குடிமக்கள் உள்ளூர் பயன்பாட்டிற்காக, பழைய வாகனங்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் கடைகளுக்கு இனி நடந்து செல்வார்களா? எந்தவொரு வாகனத்தின் வயதுக்கும், அதனால் ஏற்படும் மாசுபாட்டிற்கும் சம்பந்தம் இல்லை. பிறகு ஏன், இந்த அவசர உத்தரவு? -ஆதிஷி, டில்லி முன்னாள் முதல்வர், ஆம் ஆத்மி