Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/சென்செக்ஸ் 82 ஆயிரம், நிப்டி 25 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய உச்சம்

சென்செக்ஸ் 82 ஆயிரம், நிப்டி 25 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய உச்சம்

சென்செக்ஸ் 82 ஆயிரம், நிப்டி 25 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய உச்சம்

சென்செக்ஸ் 82 ஆயிரம், நிப்டி 25 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய உச்சம்

UPDATED : ஆக 01, 2024 10:29 AMADDED : ஆக 01, 2024 10:26 AM


Google News
Latest Tamil News
மும்பை: வரலாறு காணாத அளவில், சென்செக்ஸ் 82 ஆயிரம் புள்ளிகளை கடந்தும், நிப்டி 25 ஆயிரம் புள்ளிகளை கடந்தும் புதிய உச்சம் தொட்டது.

உள்நாட்டு பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி இன்று (ஆக.,1) இதுவரை இல்லாத அளவு புதிய உச்சம் தொட்டுள்ளது. இன்று வர்த்தகம் துவங்கியதும் ஏற்றத்துடன் காணப்பட்ட நிலையில், காலை 10 மணி நிலவரப்படி 82,014 என்ற புதிய உச்ச நிலையை எட்டியது. பின்னர் சற்று வர்த்தகம் குறைந்ததால் 10:20 மணிக்கு 81,972 புள்ளிகளாக வர்த்தகமாகின. இது நேற்றைய நிலவரத்தை விட 227.4 புள்ளிகள் அதிகம்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி வர்த்தகம் துவங்கியதும் 25 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய உச்சத்துடனேயே வர்த்தகமாகியது. காலை 10:20 மணி நிலவரப்படி, 97.7 புள்ளிகள் உயர்ந்து 25,044 ஆக வர்த்தகமானது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us