அதானிக்கு எதிரான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை: செபி
அதானிக்கு எதிரான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை: செபி
அதானிக்கு எதிரான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை: செபி

ஆதாரம் இல்லை
இந்நிலையில், விசாரணை முடிவில், அதானி மற்றும் அவரது நிறுவனத்துக்கு எதிரான ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்து உள்ளது. முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்தக்கூடிய பத்திரங்கள் அல்லது கட்டுப்பாடுகளை கையகப்படுத்துவதில் எந்த விதிமீறலும் இல்லை. இதனால், அதானி நிறுவனம் அல்லது அதன் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பதோ அல்லது அபராதம் விதிப்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.
அதானி அறிக்கை
இதனையடுத்து அதானி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: விரிவான விசாரணைக்கு பிறகு, ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்ற எங்களின் கருத்தை செபி உறுதி செய்துள்ளது. வெளிப்படைத்தன்மைக்கு எப்போதும் அதானி நிறுவனம் முக்கியத்துவம் அளிக்கும். இந்த மோசடியான மற்றும் புனையப்பட்ட அறிக்கையால் இழப்பை சந்தித்த முதலீட்டாளர் வேதனை அடைந்தது வருத்தம் அளிக்கிறது. தவறான கதைகளை பரப்பியவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்திய அமைப்புகளுக்கும், மக்களுக்கும், தேசத்தக்கும் நாங்கள் கொண்ட உறுதிப்பாடு ஆகியவை மீதான எங்களின் உறுதிப்பாட்டை அசைக்க முடியாது. ஜெய்ஹிந்த். சத்யமேவ ஜெயதே. இவ்வாறு அந்த அறிக்கையில் அதானி கூறியுள்ளார்.