ஹேக் ஆனது மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் சமூக வலைதளம்
ஹேக் ஆனது மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் சமூக வலைதளம்
ஹேக் ஆனது மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் சமூக வலைதளம்
ADDED : ஜூலை 03, 2025 04:49 PM

புவனேஸ்வர்: மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக் எக்ஸ் சமூக வலைதளம் கணக்கு ஹேக் ஆனதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஒடிசாவின் புரி பகுதியை சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக், இவர் ஒரு மணல் சிற்ப கலைஞர். இவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு மத்திய அரசு, பத்மஸ்ரீ விருது கவுரவித்தது.
இந்நிலையில் தனது எக்ஸ் சமூக வலைதளம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா சுதர்சன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுதர்சன் பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கை:
எனது அதிகாரபூர்வமான எக்ஸ் சமூக வலைதளம் கணக்கு கடந்த 6 நாட்களாக ஹேக் ஆகி உள்ளது. இது தொடர்பாக, நான் ஒடிசா காவல்துறையின் சைபர் செல்லில் முறையான புகார் அளித்துள்ளேன். மேலும் எக்ஸ் சமூகவலைதளம் குழுவினருக்கும் எனது பிரச்னை குறித்து புகார் தெரிவித்துள்ளேன். இவ்வளவு நடவடிக்கை எடுத்த போதும் எனது கணக்கு இன்னும் ஹேக் ஆகி இருக்கிறது. இவ்வாறு ஹேக் செய்யப்பட்டிருப்பது இரண்டாவது முறையாகும்.
இவ்வாறு சுதர்சன் பட்நாயக் அறிக்கையில் கூறியுள்ளார்.