ரூ.7,755 கோடி 2000 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளன: ரிசர்வ் வங்கி
ரூ.7,755 கோடி 2000 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளன: ரிசர்வ் வங்கி
ரூ.7,755 கோடி 2000 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளன: ரிசர்வ் வங்கி
ADDED : ஜூன் 03, 2024 07:01 PM

மும்பை : உயர்மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் ரூ. 7,755 கோடி பொதுமக்களிடம் உள்ளதாக ரிசர்வ் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு மே 19ம் தேதி, ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. அறிவித்தபோது புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 3.56 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
இந்நிலையில் கடந்த மார்ச் 01-ம் தேதி நிலவரப்படி 2000 ரூபாய் நோட்டுகள் 97.62 சதவீதம் வங்கிக்கு திரும்பியுள்ளதாகவும்; இன்னும் ரூ. 8,470 கோடி மதிப்பிலான நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளதாக ரிசர்வ் வங்கி கடந்த மே.02-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து இன்று (ஜூன்.03) ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏப்ரல் மாதம் இறுதி நிலவரப்படி பொதுமக்களிடம் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில், 97.76 சதவீதம் திரும்பப்பெறப்பட்ட நிலையில் இன்னும் ரூ. 7,755 கோடி மதிப்பிலான 2000 நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளன. இதன் மூலம் 97.82 சதவீதம் திரும்ப பெறப்பட்டன. இவ்வாறு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.