Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ வங்கியில் ரூ.53 கோடி நகை கொள்ளை

வங்கியில் ரூ.53 கோடி நகை கொள்ளை

வங்கியில் ரூ.53 கோடி நகை கொள்ளை

வங்கியில் ரூ.53 கோடி நகை கொள்ளை

ADDED : ஜூன் 03, 2025 04:29 AM


Google News
Latest Tamil News
விஜயபுரா : கர்நாடகாவில் உள்ள கனரா வங்கி கிளையில், 59 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது.

கர்நாடக மாநிலம், விஜயபுரா எஸ்.பி., லட்சுமண் நிம்பரகி நேற்று அளித்த பேட்டி:

விஜயபுரா மாவட்டம், பசவனபாகேவாடி தாலுகாவின், மனகோலியில் கனரா வங்கி கிளை உள்ளது. மே 25ம் தேதி நள்ளிரவு, அங்கு வந்த மர்ம கும்பல், பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளது.

வங்கியில் அடமானம் வைத்திருந்த மற்றும் லாக்கரில் பாதுகாப்பாக வைத்திருந்த 59 கிலோ தங்க நகைகள், 5.20 லட்சம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளை அடித்தது. நகைகளின் மதிப்பு 53.26 கோடி ரூபாய்.

வங்கி கொள்ளையில், ஆறு முதல் எட்டு பேர் ஈடுபட்டுள்ளனர். கொள்ளை அடித்தபின், கண்காணிப்பு கேமராவின் ஹார்டு டிஸ்கை திருடி சென்றுள்ளனர்.

இவர்களை பிடிக்க எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விசாரணையை திசைதிருப்ப வங்கி முன், மாந்த்ரீகம் நடந்ததை போன்ற தோற்றத்தை ஏற்படுத்த, கருப்பு நிற உடை அணிந்த பொம்மை வைத்து பூஜை செய்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us