Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ ராஜஸ்தான் அரசு பஸ் கார் மோதலில் ஏட்டு பலி

ராஜஸ்தான் அரசு பஸ் கார் மோதலில் ஏட்டு பலி

ராஜஸ்தான் அரசு பஸ் கார் மோதலில் ஏட்டு பலி

ராஜஸ்தான் அரசு பஸ் கார் மோதலில் ஏட்டு பலி

ADDED : ஜூன் 22, 2025 08:58 PM


Google News
குருகிராம்:டில்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில், குருகிராம் அருகே பஸ் கவிழ்ந்ததில், ராஜஸ்தானை சேர்ந்த போலீஸ் தலைமை காவலர் இறந்தார்; 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து, டில்லிக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் அரசு போக்குவரத்து கழக பஸ், நேற்று முன்தினம் காலையில், ராஜஸ்தானிலிருந்து, டில்லிக்கு வந்து கொண்டிருந்தது.

டில்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் பச்சான் சவுக் என்ற இடத்தில் அந்த பஸ் வந்த போது, கார் ஒன்றுடன் மோதாமல் இருக்க திருப்பிய போது, சாலையை விட்டு இறங்கி, கவிழ்ந்தது.

இதில், சம்பவ இடத்திலேயே, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த, அசோக்குமார், 38, என்ற போலீஸ் தலைமை காவலர் பலியானார். 20 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில், அந்த அரசு பஸ்சின் கண்டக்டர் மற்றும் ஒரு குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள், தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிறர், ஆங்காங்கே உள்ள அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கவிழ்ந்து கிடந்த அந்த அரசு பஸ், கிரேன் உதவியால் மீட்கப்பட்டது. இறந்த போலீஸ் தலைமை காவலருக்கு மகள், மகன் என இருவர் உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us