Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ பல மாநிலங்களில் வேட்டையாடி பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் கைது

பல மாநிலங்களில் வேட்டையாடி பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் கைது

பல மாநிலங்களில் வேட்டையாடி பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் கைது

பல மாநிலங்களில் வேட்டையாடி பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் கைது

ADDED : செப் 12, 2025 02:19 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி:நாட்டின் பல மாநிலங்களில் ரெய்டு நடத்திய டில்லி போலீசின் சிறப்பு பிரிவு போலீசார், ஐந்து பேரை கைது செய்துள்ளனர் .

பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடி குண்டுகள் தயாரிக்க பயன்படுத்தும் பொருட்களுடன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால், பயங்கர சதிச் செயலில் இருந்து நம் நாடு தப்பியுள்ளது.

ஐந்து பேர் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் பதுங்கியிருந்த அஷார் டேனிஷ் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலம் டில்லியில் பதுங்கியிருந்த அப்தாப் மற்றும் சுபியான், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த முசாபா மற்றும் கம்ரான் ஆகிய ஐந்து பேர், டில்லி போலீசார் மேற்கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் மற்றும் பல மாநிலங்களின் போலீசாருடன் இணைந்து, டில்லி போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில், இந்த ஐந்து பயங்கரவாதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெடிகுண்டு பயங்கர வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் மற்றும் பொருட்களுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால், மிகப் பெரிய ஆபத்திலிருந்து நம் நாடு தப்பியுள்ளது என பாதுகாப்பு படையினர் கூறுகின்றனர்.

இந்த கும்பலின் தலைவனாக கருதப்படும் அஷார் டேனிஷ் என்பவரை, சி.இ.ஒ., கஸ்பா, புரபசர் என்ற பெயர்களில் இந்த கும்பலை சேர்ந்தவர்கள் அழைத்து வந்துள்ளனர்.

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் சில கும்பல்களால் இவர்கள் இயக்கப்பட்டு வந்துள்ளனர்.

மிகுந்த கவனத்துடன் டில்லி போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைக்கு பின், இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இவர்கள் அளித்த தகவலின் படி, இவர்களின் பதுங்குமிடங்கள் மற்றும் வீடுகளில் இருந்து வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுத்தும் ரசாயனங்கள், பால் பேரிங் குண்டுகள் மற்றும் பிற பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

விசாரணை அத்தகைய பொருட்களில் சில எலக்ட்ரானிக் பொருட்கள், சோடியம் பைகார்பனேட், காஸ் மாஸ்க்குகள், எலக்ட்ரிகல் கேபிள்கள், பியூஸ் பாயின்ட்டுகள், வயர்கள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின் படி, இவர்கள் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் பயங்கரவாத செயல்களை நடத்த திட்டமிட்டுள்ளது தெரிய வந்தது.

இவர்கள் கைதாகியுள்ளதால், மிகப் பெரிய ஆபத்திலிருந்து நம் நாடு தப்பியுள்ளது. பயங்கரவாத கும்பலை கைது செய்துள்ளோம் என டில்லி போலீசார் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us