சுப்ரீம் கோர்ட்டிற்கு ஜனாதிபதி 14 கேள்விகள்
சுப்ரீம் கோர்ட்டிற்கு ஜனாதிபதி 14 கேள்விகள்
சுப்ரீம் கோர்ட்டிற்கு ஜனாதிபதி 14 கேள்விகள்

காலக்கெடு
மாநில அரசுகள் சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்கள் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று கவர்னர்களுக்கும் ஜனாதிபதிக்கும் நீதிபதிகள் காலக்கெடு நிர்ணயித்தனர். தன்னால் முடிவு எடுக்க முடியாத மசோதாக்களை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைப்பது வழக்கம்.
எதிர்பார்ப்பு
மாறாக, அரசியல் சாசனத்தின், 143 (1) பிரிவின் கீழ் உள்ள சிறப்பு அதிகாரத்தை ஜனாதிபதி பயன்படுத்தி, கோர்ட்டிடம் சில விளக்கங்களை கேட்டுள்ளார். சட்டம் சம்பந்தப்பட்ட சந்தேகத்தை ஜனாதிபதி கேட்பதற்கும், அதற்கு சுப்ரீம் கோர்ட் விளக்கம் அல்லது பதில் அளிப்பதற்கும் இந்த சட்டப்பிரிவு இடமளிக்கிறது. அதன்படி, கவர்னருக்கும் ஜனாதிபதிக்கும் காலக்கெடு விதித்தது தொடர்பாக, 14 கேள்விகளை முர்மு கேட்டுள்ளார்.
ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகள்
1) ஒரு மசோதா கவர்னரிடம் சமர்ப்பிக்கப்படும் போது, அரசியல் சாசனத்தின் 200வது பிரிவின் கீழ் அவருக்கு உள்ள சட்ட ரீதியான வாய்ப்புகள் என்ன?
சட்டப்பிரிவு 200 சொல்வது என்ன?
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் கவர்னருக்கு உள்ள பங்கை சட்டப்பிரிவு, 200 கையாள்கிறது. மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது, நிறுத்தி வைப்பது, திருப்பி அனுப்புவது, ஜனாதிபதியின் பரிசீலனைக்காக அனுப்புவது ஆகிய கவர்னரின் வாய்ப்புகளை இது வழங்குகிறது.