Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/பீஹாரில் ஜன் சுராஜ் ஆட்சியை விரும்பும் 60% மக்கள்; பிரசாந்த் கிஷோர் நம்பிக்கை

பீஹாரில் ஜன் சுராஜ் ஆட்சியை விரும்பும் 60% மக்கள்; பிரசாந்த் கிஷோர் நம்பிக்கை

பீஹாரில் ஜன் சுராஜ் ஆட்சியை விரும்பும் 60% மக்கள்; பிரசாந்த் கிஷோர் நம்பிக்கை

பீஹாரில் ஜன் சுராஜ் ஆட்சியை விரும்பும் 60% மக்கள்; பிரசாந்த் கிஷோர் நம்பிக்கை

ADDED : ஜூன் 14, 2025 10:39 AM


Google News
Latest Tamil News
பாட்னா; பீஹாரில் 60 சதவீதம் மக்கள் ஜன் சுராஜ் கட்சி ஆட்சி அமைய வேண்டும் என்று விரும்புவதாக அக்கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் கூறி உள்ளார்.

தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், ஜன் சுராஜ் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்துள்ளார். இவரது கட்சி பீஹார் சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறது.

தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், பிரசாந்த் கிஷோர் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக 2 நாள் கிராமப்பகுதிகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

கயா, வாசிர்கஞ்ச் பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்டங்களில் அவர் பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;

மக்களிடம் மனோநிலை மாறிவருகிறது என்பதை தான் நான் கடந்த 2 ஆண்டுகளாக கூறி வருகிறேன். இம்முறை பீஹாரில் வரலாறு மாற்றி எழுதப்படும். 2 ஆண்டுகளாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு சென்று வந்திருக்கிறேன்.

அங்குள்ள 60 சதவீதம் மக்கள் மாற்றம் வேண்டும் என்று நினைக்கின்றனர். கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை தங்களின் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். பா.ஜ. மற்றும் லாலுவின் ஆட்சியினால் அவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இப்போது அவர்கள் எதிர்பார்க்கும் மாற்றம் ஜன் சுராஜ் மூலம் வர உள்ளது. ஜன் சுராஜ் கட்சி மாற்று என்பதை அவர்கள் உணர ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us