Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/பிறந்த நாளன்று மயங்கி விழுந்து பலியான பிளஸ் 2 மாணவி

பிறந்த நாளன்று மயங்கி விழுந்து பலியான பிளஸ் 2 மாணவி

பிறந்த நாளன்று மயங்கி விழுந்து பலியான பிளஸ் 2 மாணவி

பிறந்த நாளன்று மயங்கி விழுந்து பலியான பிளஸ் 2 மாணவி

ADDED : ஜூன் 13, 2025 09:31 PM


Google News
Latest Tamil News
பாலக்காடு; பாலக்காடு அருகே, பிறந்த நாளன்று, 17 வயது சிறுமி மயங்கி விழுந்து இறந்தார்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பொய்ப்புள்ளி பகுதியை சேர்ந்த ராஜனின் மகள் ஸ்ரேயா, 17. இவர், வீட்டின் அருகே உள்ள மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

இந்நிலையில், பிறந்த நாளான நேற்று காலை 8:00 மணிக்கு வீட்டில் இருந்த ஸ்ரேயா திடீரென மயங்கி விழுந்தார். இதை கண்ட குடும்பத்தினர், அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சித்தூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, இறப்புக்கான காரணம் தெரியும் என, போலீசார் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us