'ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட்': நக்சல்களின் முதுகெலும்பை உடைத்த பாதுகாப்பு படையினர்
'ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட்': நக்சல்களின் முதுகெலும்பை உடைத்த பாதுகாப்பு படையினர்
'ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட்': நக்சல்களின் முதுகெலும்பை உடைத்த பாதுகாப்பு படையினர்

தப்பியோட்டம்
மேலும் இந்த சோதனையில், அவர்களின் 214 மறைவிடங்கள் மற்றும் பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன. 450 ஐஇடி வகை குண்டுகள், 818 பிஜிஎல் குண்டுகள், டெட்டனேட்டர்கள் மற்றும் வெடி மருந்துகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 12 ஆயிரம் கிலோ உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பாதுகாப்பு படையினரின் அதிரடிக்கு தாக்குபிடிக்க முடியாமல் ஏராளமான நக்சலைட்கள் தப்பியோடினர். பலர் சரணடைந்தனர்.
பாதுகாப்பு படை முகாம்
பாதுகாப்புபடையினரின் இந்த நடவடிக்கைக்கு சத்தீஸ்கரின் கல்ஹாம் பகுதியில் 2022ம் ஆண்டு அமைக்கப்பட்ட முகாம் முக்கிய பங்கு வகித்தது. இங்கு தான் நக்சலைட்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு திட்டங்கள் தீட்டப்பட்டன. இங்கிருந்துதான் தகவல்கள் மற்ற இடங்களுக்கு அனுப்பப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
மக்கள் நம்பிக்கை
மற்றொரு அதிகாரியான குமார் மணீஷ் கூறுகையில், கடந்த சில மாதங்களாக, தெற்கு பஸ்தர் பகுதியில் இருந்த நக்சல்கள், தெலுங்கானாவை சேர்ந்தவர்களுடன் இங்கு மறைந்து இருந்தனர். இதனால், இங்கு 'ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட்' நடவடிக்கையை துவக்க வேண்டியிருந்தது. இங்கு உள்ளூர் மக்களுடன்இணைந்து செயல்படுகிறோம். அரசின் திட்டங்களின் பலன்கள் அவர்களுக்கு கிடைக்கச் செய்கிறோம். அவர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளோம்.இதன் காரணமாக நக்சல்களின் ஆதிக்கம் இங்கு முடிவுக்கு வந்துள்ளது என்றார்.