Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஹிந்துக்கள் மட்டுமே திருமலை கோயிலில் பணியாற்ற வேண்டும்: சந்திரபாபு நாயுடு

ஹிந்துக்கள் மட்டுமே திருமலை கோயிலில் பணியாற்ற வேண்டும்: சந்திரபாபு நாயுடு

ஹிந்துக்கள் மட்டுமே திருமலை கோயிலில் பணியாற்ற வேண்டும்: சந்திரபாபு நாயுடு

ஹிந்துக்கள் மட்டுமே திருமலை கோயிலில் பணியாற்ற வேண்டும்: சந்திரபாபு நாயுடு

ADDED : மார் 21, 2025 06:36 PM


Google News
Latest Tamil News
திருமலை : ஹிந்துக்கள் மட்டுமே திருமலை கோயிலில் பணியாற்ற வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு ஆந்திர சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து 'திருமலையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் ஹிந்துக்களாக இருக்க வேண்டும்,'' என, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்தின் தலைவர் பி.ஆர்.நாயுடு கடந்தாண்டு நவம்பரில் அறிவித்தார்.

இந்நிலையில் தனது பேரனின் பிறந்த நாளையொட்டி குடும்பத்துடன் திருமலை கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளதாவது:

நாட்டின் அனைத்து மாநில தலைநகரங்களிலும் வெங்கடேஸ்வர சுவாமிக்கு கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒத்துழைப்பு கோரி அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுத உள்ளேன்.

இக்கோயிலில் ஹிந்துக்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும். ஹிந்துக்கள் அல்லாத பிற மதத்தவர்கள் பணியாற்றி வந்தால் அவர்கள் வேறு பணிக்கு மாற்றப்படுவார்கள்.

ஏழுமலையான் வெங்கடேஸ்வர சுவாமியும் அதன் புனிதத்தன்மையும் பாதுகாக்கப்பட வேண்டும். கோவிலில் புனிதமற்ற செயல்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தேவஸ்தான வாரியத்தின் உறுப்பினர்களின் தலையாய கடமை. இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us