என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம்
என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம்
என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம்

வெறும் 22 நிமிடங்கள் தான்!
பாகிஸ்தான் 9 பயங்கரவாதி முகாம்களை வெறும் 22 நிமிடத்தில் அழித்து இருக்கிறோம். நமது முப்படைகளின் சக்கரவியூகத்தால் பாகிஸ்தான் மண்டியிட்டுள்ளது. இந்தியர்களின் ரத்தத்துடன் விளையாடுவதற்கு பாகிஸ்தான் பெரும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். ஒவ்வொரு பயங்கரவாதத் தாக்குதலுக்கும் இந்திய பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பதை நிரூபித்துள்ளோம்.
பயப்பட மாட்டோம்!
அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு இந்தியா பயப்படப் போவதில்லை. பாகிஸ்தானின் ரஹீம் யார் கான் விமானப்படைத் தளம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, ஒவ்வொரு இந்தியரும் ஒரே குரலில் ஒன்றுபட்டு, பயங்கரவாதத்தை ஒழிக்கவும் கற்பனைக்கு அப்பாற்பட்ட தண்டனையை உறுதி செய்யவும் தீர்மானித்தனர்.
துணிச்சல்!
இந்திய ஆயுதப் படைகளின் துணிச்சலால் தான் இன்று நாம் வலுவாக நிற்கிறோம். எங்கள் அரசாங்கம் மூன்று படைகளுக்கும் சுதந்திரக் கரம் கொடுத்தது. மேலும் ஒன்றாக, முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்தும் உத்தியை வகுத்தன. அது பாகிஸ்தான் சரண் அடைய வழி வகுத்தது.
வழிபாடு
ராஜஸ்தானில் புகழ் பெற்ற கர்ணி மாதா கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்தினார்.