வசுதைவ குடும்பகத்தின் வாழும் உதாரணம் மோகன் பகவத்: பிரதமர் மோடி
வசுதைவ குடும்பகத்தின் வாழும் உதாரணம் மோகன் பகவத்: பிரதமர் மோடி
வசுதைவ குடும்பகத்தின் வாழும் உதாரணம் மோகன் பகவத்: பிரதமர் மோடி

இன்னொரு முக்கியத்துவம்
அன்றாட சவால்
ஜனநாயக கோட்பாடுகளை மதித்து, இந்தியாவின் செழுமையில் விருப்பம் கொண்டிருந்த அனைவரும் அவசரநிலைக்கு எதிரான இயக்கத்தை வலிமைப்படுத்துவதில் தீவிரம் காட்டினர். மோகன் அவர்களும், எண்ணிலடங்காத ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களும் இதையேதான் செய்தனர். மகாராஷ்டிராவின் ஊரக மற்றும் பின்தங்கிய பகுதிகளில், குறிப்பாக விதர்பாவில் அவர் தீவிரமாக பணியாற்றினார்.
ஊக்கம்
தேசிய கலாசாரத்திற்கும், நம் நாட்டின் கூட்டு உணர்விற்கும் ஆற்றல் அளிக்கும் ஒரு நிலையான ஆலமரம் போல ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு செயல்படுவதாக இந்த ஆண்டின் துவக்கத்தில் நடைபெற்ற நாக்பூரின் மாதவ் நேத்ரா மருத்துவமனையின் துவக்க விழாவில் நான் கூறியிருந்தேன். இந்த ஆலமரத்தின் வேர்கள் மாண்புகளில் நங்கூரமிடப்பட்டிருப்பதால், அவை ஆழமாகவும் வலிமையாகவும் இருக்கின்றன.
மைல்கல்
இந்த ஆண்டு, இன்னும் சில நாட்களில் ஆர்.எஸ்.எஸ்., 100 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த மகிழ்ச்சியான தருணத்தின் ஒற்றுமை என்னவெனில் இந்த ஆண்டு விஜயதசமி, காந்தி ஜெயந்தி, லால் பகதுார் சாஸ்திரி ஜெயந்தி மற்றும் ஆர்.எஸ்.எஸ்.,சி-ன் நுாற்றாண்டுக் கொண்டாட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் அமைவது தற்செயலான ஒன்று.