Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/உலக நாடுகளுக்கு சென்று திரும்பிய எம்.பி.,க்கள் குழுவிற்கு நாளை மோடி விருந்து

உலக நாடுகளுக்கு சென்று திரும்பிய எம்.பி.,க்கள் குழுவிற்கு நாளை மோடி விருந்து

உலக நாடுகளுக்கு சென்று திரும்பிய எம்.பி.,க்கள் குழுவிற்கு நாளை மோடி விருந்து

உலக நாடுகளுக்கு சென்று திரும்பிய எம்.பி.,க்கள் குழுவிற்கு நாளை மோடி விருந்து

UPDATED : ஜூன் 10, 2025 07:32 PMADDED : ஜூன் 09, 2025 09:25 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: ஆப்பரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம் அளிக்க நியமிக்கப்பட்ட சர்வ கட்சி எம்.பி.,க்கள் குழுவினரை நாளை மோடி சந்தித்து விருந்து அளிக்க உள்ளார்.

காஷ்ரின் பஹல்காமில் கடந்த ஏப். 22-ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குல் நடத்தி 26 அப்பாவி உயிர்களை பறித்தனர். இதற்கு பதிலடியாக இந்திய நடத்திய ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு பாகிஸ்தான் தவறான தகவலை பரப்பி வருவதை தடுத்திட மத்திய அரசு, தி.மு.க,வின் கனிமொழி, காங்., சசிதரூர் உள்ளிட்ட சர்வ கட்சி எம்.பி.க்கள் குழுவை அனுப்பி வைத்தது. இவர்கள் பல்வேறு நாடுகளுக்கு சென்று இந்தியாவின் செயல்பாடுகளை எடுத்துரைத்து திரும்பினர்.

இவ்வாறு உலக நாடுகளுக்கு சென்று திரும்பிய சர்வ கட்சி எம்.பி.க்குழுவினரை நாளை (ஜூன் 10) இரவு 7 மணியளவில் பிரதமர் மோடி சந்தித்து விருந்து அளிக்க உள்ளார். அப்போது எம்.பி.க்கள் குழுவினர் தங்களது அனுபவங்களை மோடியிடம் பகிர்ந்து கொள்ள உள்ளனர். இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us