Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ மிகுந்த வரவேற்பை பெற்ற மிசோரம் பைராபி-சாய்ராங் ரயில் சேவை!

மிகுந்த வரவேற்பை பெற்ற மிசோரம் பைராபி-சாய்ராங் ரயில் சேவை!

மிகுந்த வரவேற்பை பெற்ற மிசோரம் பைராபி-சாய்ராங் ரயில் சேவை!

மிகுந்த வரவேற்பை பெற்ற மிசோரம் பைராபி-சாய்ராங் ரயில் சேவை!

ADDED : அக் 02, 2025 07:18 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: மிசோரமில் தொடங்கப்பட்ட பைராபி - சாய்ராங் ரயில் போக்குவரத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

மிசோரமில் 51.38 கிமீ நீளமுள்ள பைராபி-சாய்ராங் ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 13 அன்று, டில்லி செல்லும் முதல் ராஜ்தானி எக்ஸ்பிரஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில்பாதை தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:

மிசோரத்தில் பைராபி-சாய்ராங் ரயில் பாதை இயக்கப்பட்டதும், நாகாலாந்தில் உள்ள மோல்வோமில் இருந்து சரக்கு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதும் பயணிகள் மற்றும் சரக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து ரயில்வே ஊக்கமளிக்கும் வரவேற்பைக் கண்டுள்ளது.

புதிய ரயில் பாதை உள்ளூர் தயாரிப்புகளுக்கு சிறந்த சந்தை நடவடிக்கைக்கு உறுதியளிக்கிறது. இது வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்புக்கான புதிய வாய்ப்புகளையும் வழங்குகிறது.

சுற்றுலாப் பயணிகள் மற்றும் பயண ஆர்வலர்கள் இதில் பயணிக்க மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளனர்.

ரயில் எண். 20507 (சாய்ராங்-ஆனந்த் விஹார் முனையம், டில்லி) ராஜ்தானி எக்ஸ்பிரஸ் 162.5 சதவீத முன்பதிவும், அதே நேரத்தில் அதன் திரும்பும் சேவையான ரயில் எண். 20508 (ஆனந்த் விஹார் முனையம், டில்லி-சாய்ராங்) ராஜ்தானி எக்ஸ்பிரஸ் 158.3 சதவீத முன்பதிவும் செய்யப்பட்டிருக்கிறது.

மேலும், குவஹாத்தி செல்லும் சேவைகளும் பலத்த வரவேற்பைப் பெற்றன, ரயில் எண். 15609 (குவஹாத்தி-சாய்ராங்) எக்ஸ்பிரஸ் ரயில்கள் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்ட ஸ்லீப்பர் வகுப்பு உட்பட 100.1 சதவீத பயணிகளை கையாண்டிருந்தது. மேலும் ரயில் எண். 15610 (சாய்ராங்-சாய்ராங்) எக்ஸ்பிரஸ் ரயில்கள் கிட்டத்தட்ட 100 சதவீத பயணிகளை கையாண்டிருக்கிறது.

இவ்வாறு ரயில்வே அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us