ADDED : மே 21, 2025 09:31 PM
புதுடில்லி:தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், டில்லி மெட்ரோ ரயில் நீல வழித்தடத்தில் ரயில்கள் தாமதமாக வந்தன.
டில்லி மெட்ரோ ரயில் நீல வழித்தடத்தில், துவாரகா மற்றும் ஜனக்புரி மேற்கு இடையே நேற்று காலை தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
டில்லி மெட்ரோ ரயில் நிறுவன பொறியாளர்கள் ஒரு மணி நேரம் போராடி தொழில் நுட்பக் கோளாறை சீரமைத்தனர்.
இதையடுத்து, நீல வழித்தடத்தில் ரயில்கள் வழக்கம்போல இயங்கின.