Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/லலித் மோடியின் ரூ.10.65 கோடி இழப்பீடு தொகை மனு:சுப்ரீம் கோர்ட் நிராகரிப்பு

லலித் மோடியின் ரூ.10.65 கோடி இழப்பீடு தொகை மனு:சுப்ரீம் கோர்ட் நிராகரிப்பு

லலித் மோடியின் ரூ.10.65 கோடி இழப்பீடு தொகை மனு:சுப்ரீம் கோர்ட் நிராகரிப்பு

லலித் மோடியின் ரூ.10.65 கோடி இழப்பீடு தொகை மனு:சுப்ரீம் கோர்ட் நிராகரிப்பு

UPDATED : ஜூன் 30, 2025 04:19 PMADDED : ஜூன் 30, 2025 03:50 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மீது, அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை விதித்த ரூ.10.65 கோடி அபராதத்திற்கு இழப்பீடு கோரி, இந்தியன் பிரீமியர் லீக் முன்னாள் தலைவர் லலித் குமார் மோடி தாக்கல் செய்த ரிட் மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று நிராகரித்தது.

2009 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பிரீமியர் லீக் தொடரின் போது நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பாக, அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் லலித் மோடிக்கு அமலாக்கத்துறை ரூ.10.65 கோடி அபராதம் விதித்தது. அதை தொடர்ந்து லலித் மோடி, பி.சி.சி.ஐ., எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் இழப்பீடு கோரினார். இழப்பீடு தொகையான ரூ.10.65 கோடியை, பி.சி.சி.ஐ., ஈடுகட்ட வேண்டும் என்று லலித் மோடி மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.எஸ். நரசிம்ம மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று பட்டியலிடப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், லலித் மோடி, அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் இழப்பீடு கோரி சிவில் வழக்கைத் தொடரலாம். ஆனால் பி.சி.சி.ஐ., மீது எந்த கட்டாயமும் ஏற்படுத்த முடியாது. பி.சி.சி.ஐ.-க்கு எந்த கடமையும் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறி கோரிக்கை மனுவை நிராகரித்து உத்தரவிட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us