Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ ஆமதாபாத் விமான விபத்தில் பலியான குருஷேத்ரா பெண்

ஆமதாபாத் விமான விபத்தில் பலியான குருஷேத்ரா பெண்

ஆமதாபாத் விமான விபத்தில் பலியான குருஷேத்ரா பெண்

ஆமதாபாத் விமான விபத்தில் பலியான குருஷேத்ரா பெண்

ADDED : ஜூன் 13, 2025 08:33 PM


Google News
குருஷேத்ரா:குஜராத்தின் ஆமதாபாத் நகரில் நேற்று முன்தினம் நிகழ்ந்த விமான விபத்தில் பலியான 241 பேரில், அஞ்சு சர்மா, 55, என்பவரும் அடங்குவார். அவரின் பெற்றோர், ஹரியானாவின் குருஷேத்ரா மாவட்டத்தின் ராம்சரண் மஜ்ரா என்ற கிராமத்தில் வசிக்கின்றனர். முதுமை காரணமாக, அஞ்சு சர்மாவின் தந்தைக்கு உடல் நலக்குறைபாடு ஏற்பட்டு, வீட்டிலேயே சிகிச்சை பெறுகிறார்.

அவரை பார்ப்பதற்காக, குஜராத்தின் வதோதரா என்ற நகரிலிருந்து வந்திருந்த மகள் அஞ்சு சர்மா, தன் மூத்த மகளை பார்ப்பதற்காக லண்டன் சென்ற விமானத்தில் நேற்று முன்தினம் பயணித்தார். அந்த விமானம் விபத்துக்கு உள்ளாகி, அதில் இருந்த அஞ்சு சர்மா உள்ளிட்டோர் இறந்த தகவல் அறிந்து, லண்டனில் இருந்து, அவர் மகள் குருஷேத்ரா நகருக்கு வந்து கொண்டுள்ளார்.

அஞ்சு சர்மாவின் கணவர், இன்ஜினியராக, எண்ணெய் நிறுவனம் ஒன்றில், குஜராத்தின் வதோதரா நகரில் பணியாற்றினார். அவர் மறைந்த பின், வதோதரா நகரிலேயே அஞ்சு வசிக்கிறார். அவர் போலவே, அவரின் சகோதரர் மிலன் சர்மா, இளைய மகள் ஆகியோரும் வதோதராவில் தான் வசிக்கின்றனர்.

இந்த தகவலை கூறிய, அஞ்சுவின் சித்தப்பா பாலகிருஷ்ண சர்மா,''விமான விபத்தில் அஞ்சு இறந்து விட்டார் என்ற தகவலை அவரின் தந்தையிடம் கூறவில்லை. ஏனெனில், உடல் நலக்குறைவால் அவதிப்படும் அவரால், மகள் இறப்பை தாங்க முடியாது என கருதுகிறோம். எனினும், நீண்ட காலத்திற்கு அதை மறைக்க முடியாது,'' என்றார்.

ஆமதாபாத் விமான விபத்தில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்டோர் இறந்து விட்டனர். அந்த விபத்துக்கான காரணம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us