Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுன்டர்: பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுன்டர்: பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுன்டர்: பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுன்டர்: பயங்கரவாதி சுட்டுக்கொலை

ADDED : செப் 08, 2025 11:32 AM


Google News
Latest Tamil News
குல்காம்: ஜம்முகாஷ்மீரில் என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த சம்பவத்தில் ராணுவ வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.

இதுபற்றிய விவரம் வருமாறு;

குதார் வனப்பகுதியில் சந்தேக நபர்கள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவுத்துறையினர் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து, அந்த குறிப்பிட்ட வனப்பகுதியில் உள்ளூர் போலீசாருடன் இணைந்து, பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

அப்போது வனப்பகுதியில் பதுங்கியருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். சுதாரித்துக் கொண்ட பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர்.

பல மணிநேரம் நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். ராணுவத்தினர் தரப்பில் ஒருவர் காயம் அடைந்தார். துப்பாக்கிச் சண்டையின் முடிவில், எஞ்சிய பயங்கரவாதிகள் அங்கிருந்து அடர் வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றனர்.

அவர்களை பிடிக்கும் வகையில், பாதுகாப்பு படையினர் பல குழுக்களாக பிரிந்து தேடுதல் வேட்டையில் இறங்கி இருக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us