Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/திருச்சூரில் பஸ் நிறுத்தத்தில் நின்ற பெண்கள் மீது மோதிய தனியார் பஸ்; பகீர் வீடியோ

திருச்சூரில் பஸ் நிறுத்தத்தில் நின்ற பெண்கள் மீது மோதிய தனியார் பஸ்; பகீர் வீடியோ

திருச்சூரில் பஸ் நிறுத்தத்தில் நின்ற பெண்கள் மீது மோதிய தனியார் பஸ்; பகீர் வீடியோ

திருச்சூரில் பஸ் நிறுத்தத்தில் நின்ற பெண்கள் மீது மோதிய தனியார் பஸ்; பகீர் வீடியோ

ADDED : ஜூன் 21, 2025 07:12 PM


Google News
Latest Tamil News
திருச்சூர்; கேரளாவில் அசுர வேகத்தில் வந்த தனியார் பஸ், 3 பெண்கள் மீது மோதிய விபத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

இதுபற்றிய விவரம் வருமாறு;

திருச்சூரில் இருந்து பயணிகளுடன் தனியார் பஸ் ஒன்று கொடுங்களூருக்கு புறப்பட்டது. வழி எங்கும் மழை பெய்து கொண்டிருக்க, பஸ்சும் வந்து கொண்டிருந்தது.

சோவ்வூர் பகுதியில் பஸ் வந்த போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்தது. வந்த வேகத்தில் அன்ச்சம்கல்லு பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் மோதியது.

பஸ்சானது, அசுர வேகத்தில் வருவதைக் கண்டு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 3 பெண்கள் தப்பி ஓட நினைத்தனர். ஆனால் பஸ் அவர்கள் மீது மோதி, பின்னர் அருகில் உள்ள மின்கம்பம் மீது நின்றது.

பட்டப்பகலில், கொட்டும் மழையில் ஏற்பட்ட இந்த விபத்தை கண்டு அங்குள்ளோர் பதறினர். விபத்து நிகழ்ந்த மறு விநாடியே பஸ்சில் இருந்து எகிறி குதித்த டிரைவர், வேகமாக ஓடி தப்பினார்.

இதைக் கண்ட அங்குள்ளோர் அவரை துரத்தியபடியே சென்றனர். அவர் அருகில் உள்ள வயல்வெளிக்குள் புகுந்து மாயமானார். விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 3 பெண்களை அங்கே இருப்பவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி வைரலாகி உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us