ADDED : ஜூன் 17, 2025 04:51 AM

கலபுரகி : கர்நாடக மாநிலம், கலபுரகி மாவட்ட நீதிபதியாக இருந்தவர் விஸ்வநாத் மகடி, 44. நீதிமன்றத்தில் தன் அறையில் நேற்று காலை அமர்ந்திருந்தார்.
திடீரென தனக்கு நெஞ்சு வலிப்பதாக தெரிவித்தார். அங்கிருந்த ஊழியர்கள், அவரை காருக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து ஜெயதேவா இதய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், விஸ்வநாத் மகடி, ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 15 நாட்களுக்கு முன்பு தான், கலபுரகி நீதிமன்றத்துக்கு இவர் மாற்றப்பட்டார்.
அனைவரிடமும் சிரித்தபடி பழகுவார். மென்மையான குணத்தால், சக ஊழியர்களின் அன்பை பெற்றிருந்தார்.
இவரது மறைவுக்கு கலபுரகி மாவட்ட வக்கீல்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. அத்துடன் நேற்றைய நீதிமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.