பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

பயங்கரவாதம்
உலகம் முழுவதும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஒரு புதிய நம்பிக்கையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது. இன்று ஒவ்வொரு இந்தியரின் லட்சியமும் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும். எல்லையைத் தாண்டி பயங்கரவாத முகாம்களை நமது படைகள் துல்லியமாக அழித்தன.
வனவிலங்கு பாதுகாப்பு
கடந்த 5 ஆண்டுகளில், கிர் காடுகளில் சிங்கங்களின் எண்ணிக்கை 674 லிருந்து 891 ஆக அதிகரித்துள்ளது. இது ஊக்கமளிக்கிறது. விலங்கு கணக்கெடுப்பு பணி சவாலானது. இது 35,000 சதுர கி.மீ. பரப்பளவில் செய்யப்பட்டது, ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது. ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட அதிகரிப்பு ஊக்கமளிக்கிறது. வனவிலங்கு பாதுகாப்பு குறித்து நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.
பறக்குது கல்வியின் கொடி!
ஒரு காலத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில், தண்டேவாடா மாவட்டத்தில் நக்சல்கள் ஆதிக்கம் உச்சத்தில் இருந்தது. தற்போது மத்திய அரசின் நடவடிக்கையால் நிலைமை மாறி உள்ளது. நக்சல்கள் கொடி பறந்த இடத்தில் தற்போது கல்வியின் கொடி உயர பறக்கிறது.