காவிரி ஆரத்தி நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு
காவிரி ஆரத்தி நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு
காவிரி ஆரத்தி நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு

காவிரி தாய்
முன்னதாக காவிரி பிறப்பிடமான தலக்காவிரிக்கு, துணை முதல்வர் சிவகுமார், பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர், உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து, காவிரி தாய்க்கு சிறப்பு பூஜை செய்தனர்.
கங்கம்மா தேவி
துணை முதல்வர் சிவகுமார் தம்பதி, ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி, சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், நகரபிவிருத்தி துறை அமைச்சர் பைரதி சுரேஷ் உட்பட முக்கிய பிரமுகர்கள் தேவிக்கு பூஜை செய்து வழிபட்டனர்.

வாரிய தலைவருக்கு பாராட்டு
காவிரி ஆரத்தி நிகழ்ச்சி வெற்றி பெறுவதற்கு, பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவரும், தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்த மூத்த ஐ.ஏஎஸ் அதிகாரியுமான ராம்பிரசாத் மனோகரின் பெரும் முயற்சியே காரணம் என்று, பலரும் பாராட்டினர்.
விழாக்கோலம்
மொத்தத்தில் நகரின் மையப்பகுதியில் உள்ள சாங்கே ஏரி, விழா கோலம் பூண்டு, மக்கள் வெள்ளத்தில் மிதந்தது. வி.வி.ஐ.பி., - வி.ஐ.பி., சிறப்பு பாஸ், ஊடகத்தினர் என தனித்தனியாக பாஸ்கள் வினியோகம் செய்யப்பட்டன. அனைவரும் வெவ்வேறு நுழைவு வாயில் வழியாக அனுமதிக்கப்பட்டனர். பொது மக்களின் பாதுகாப்பாக முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக, தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள், ரப்பர் படகுகளில், ஏரியில் உலா வந்த வண்ணம் இருந்தனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு, தலக்காவிரியில் இருந்து கொண்டு வந்திருந்த காவிரி புனித தீர்த்தம், நந்தினி இனிப்பு வழங்கப்பட்டன.