Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஜார்க்கண்டில் கன மழை: மின்னல் தாக்கியும் நீரில் மூழ்கியும் 7 பேர் பலி

ஜார்க்கண்டில் கன மழை: மின்னல் தாக்கியும் நீரில் மூழ்கியும் 7 பேர் பலி

ஜார்க்கண்டில் கன மழை: மின்னல் தாக்கியும் நீரில் மூழ்கியும் 7 பேர் பலி

ஜார்க்கண்டில் கன மழை: மின்னல் தாக்கியும் நீரில் மூழ்கியும் 7 பேர் பலி

ADDED : மே 20, 2025 10:08 PM


Google News
Latest Tamil News
பொகாரோ: ஜார்க்கண்டின் பொகாரோ மாவட்டத்தில் மின்னல் தாக்கி 2 பேரும், நீரில் மூழ்கி 5 பேரும் என ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜார்க்கண்டில் பொகாரோ மாவட்டத்தில் கனமழை மற்றும் பலமான காற்றுடன் கூடிய மின்னல் தாக்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. மாவட்டத்தின் இரண்டு பகுதிகளில் பெய்த கனமழையின் போது நீரில் மூழ்கி 5 பேர் உயிரிழந்தனர். 2 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.

உள்ளூர் காவல் நிலைய பொறுப்பாளர் கவுஷலேந்திர குமார் கூறியதாவது:

மாநிலத்தின் சந்தன்கியாரி பகுதியில் உள்ள கம்ஹாரியா கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் குளித்தபோது ஒரு பெண் மற்றும் அவரது இரண்டு மகள்கள் உட்பட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இந்த சம்பவங்கள் அப்பகுதியில் பெய்த கனமழை மற்றும் மின்னல் தாக்குதல் மழையின் போது அதிகமான நிகழ்ந்தன. மின்னல் தாக்கி, ஒரு விவசாயி மற்றும் 7 வயது சிறுமி உள்பட நான்கு கால்நடைகளுக்கும் உயிரிழப்பு ஏற்பட்டது. குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் இறந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us