Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ கெஜ்ரிவால் ஜாமினை எதிர்த்த வழக்கு அமலாக்க துறைக்கு ஐகோர்ட் கண்டிப்பு

கெஜ்ரிவால் ஜாமினை எதிர்த்த வழக்கு அமலாக்க துறைக்கு ஐகோர்ட் கண்டிப்பு

கெஜ்ரிவால் ஜாமினை எதிர்த்த வழக்கு அமலாக்க துறைக்கு ஐகோர்ட் கண்டிப்பு

கெஜ்ரிவால் ஜாமினை எதிர்த்த வழக்கு அமலாக்க துறைக்கு ஐகோர்ட் கண்டிப்பு

ADDED : அக் 14, 2025 11:45 PM


Google News
புதுடில்லி:டில்லி அரசின் மதுபானக் கொள்கையில் முறைகேடு மற்றும் பணமோசை வழக்கில், முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கிய ஜாமினை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத் துறை தன் வாதங்களை முன்வைக்க, கடைசி வாய்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம், விசாரணையை நவ.10ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

டில்லி அரசின், 2021 - 20-22ம் நிதியாண்டின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அந்த மதுபானக் கொள்கையை ரத்து செய்த துணைநிலை கவர்னர் சக்சேனா, இதுகுறித்து விசாரிக்க சி.பி.ஐ.,க்கு உத்தர விட்டார்.

சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், இந்த விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தது.

கடந்த ஆண்டு மார்ச் 21ம் தேதி அமலாக்கத் துறையும், ஜூன் 26ம் தேதி சி.பி.ஐ.,யும் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தன.

டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்ட கெஜ்ரிவாலுக்கு, சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 24ம் தேதி விசாரணை நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அதைத் தொடர்ந்து, அமலாக்கத் துறையின் வழக்கில் ஜூலை 12ம் தேதி உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது.

இதையடுத்து, திஹார் சிறையில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விடுவிக்கப்பட்டார். ஆனால், கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமினை எதிர்த்து அமலாக்கத் துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இதுவரை, ஒன்பது முறை அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆஜராகாமல் வாய்தா வாங்கினர். இந்நிலையில், நீதிபதி ரவீந்தர் துடேஜா முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'எந்தக் காரணமும் இல்லாமல் இந்த வழக்கின் விசாரணை ஒன்பது முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது' என வாதிட்டார்.

நீதிபதி ரவீந்தர் துடேஜா, “இந்த வழக்கில் அமலாக்கத் துறை தன் வாதங்களை முன்வைக்க கடைசி வாய்ப்பு வழங்கப்படுகிறது. நீதிமன்ற நேரம் வீணாகாமல் இருப்பதை அமலாக்கத்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

''நவ. 10ம் தேதி இந்த வழக்கில் விசாரணை நடத்தப்படும். அப்போது, அமலாக்கத்துறை தன் கடைசி வாய்ப்பை பயன்படுத்தி தன் வாதங்களை முன்வைக்க வேண்டும்,” என உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us