Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ராணுவம் குறித்து கருத்து: ராகுலுக்கு அலகாபாத் ஐகோர்ட் கண்டிப்பு

ராணுவம் குறித்து கருத்து: ராகுலுக்கு அலகாபாத் ஐகோர்ட் கண்டிப்பு

ராணுவம் குறித்து கருத்து: ராகுலுக்கு அலகாபாத் ஐகோர்ட் கண்டிப்பு

ராணுவம் குறித்து கருத்து: ராகுலுக்கு அலகாபாத் ஐகோர்ட் கண்டிப்பு

UPDATED : ஜூன் 04, 2025 04:40 PMADDED : ஜூன் 04, 2025 04:17 PM


Google News
Latest Tamil News
லக்னோ: '' அரசியல்சாசனம் வழங்கிய பேச்சுசுதந்திரம், ராணுவம் குறித்து இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவிக்க அனுமதிக்கவில்லை,'' என அலகாபாத் ஐகோர்ட் கூறியுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு, பாரத் ஜோடோ யாத்திரையின் போது, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் இந்திய - சீன வீரர்கள் இடையே மோதலை குறிப்பிடும் போது, இந்திய ராணுவத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு எதிராக லக்னோ நீதிமன்றத்தில் உதய் சங்கர் ஸ்ரீவஸ்தவா என்பவர் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது 0மனுவில், 'அரசு மீது குற்றம்சாட்டும் நோக்கத்தில், அருணாச்சல பிரதேசத்தில் இந்திய வீரர்களை சீன வீரர்கள் தாக்குகிறார்கள் என்று ராகுல் பேசினார்,' என குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, குற்றச்சாட்டை மறுத்த ராகுல் தரப்பு வழக்கறிஞர், குற்றச்சாட்டுகள் ஜோடிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதனை ஏற்காத கூடுதல் தலைமை நீதித்துறை நீதிபதி அலோக் வர்மா ராகுலுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டு இருந்தார். இதனை எதிர்த்து ராகுல் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை அலகாபாத் ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

அப்போது நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி கூறியதாவது: அரசியல்சாசனத்தின் 19(1)(a) பிரிவு, பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை உறுதி செய்கிறது என்பதில் சந்தேகம் கிடையாது. இந்த சுதந்திரம் நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. எந்தவொரு தனி நபருக்கோ அல்லது இந்திய ராணுவத்திற்கோ அவதூறு விளைவிக்கும் அறிக்கைகள் வெளியிட சுதந்திரம் வழங்கப்படவில்லை. இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்து உள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us