Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஜம்முவில் திடீர் வெள்ளம் : 3 பேர் உயிரிழப்பு, 4 பேர் மீட்பு

ஜம்முவில் திடீர் வெள்ளம் : 3 பேர் உயிரிழப்பு, 4 பேர் மீட்பு

ஜம்முவில் திடீர் வெள்ளம் : 3 பேர் உயிரிழப்பு, 4 பேர் மீட்பு

ஜம்முவில் திடீர் வெள்ளம் : 3 பேர் உயிரிழப்பு, 4 பேர் மீட்பு

ADDED : ஜூன் 26, 2025 04:53 PM


Google News
Latest Tamil News
ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், 3 பேர் உயிரிழந்தனர், மேலும் 4 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

ஜம்முவின் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டது.மேலும் வானிலை ஆய்வு மையம், ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் கனமழை எதிர்பார்க்கப்படுவதாக எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக, அதிகாரிகள் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி, பூஞ்ச், தோடா மற்றும் கதுவா மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இன்று மேக வெடிப்பு மற்றும் பலத்த மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 3 பேர் இறந்தனர். இதுவரை 4 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

ரஜோரியின் கலகோட் துணைப்பிரிவில் உள்ள சியால்சுய் மௌ கிராமத்தில் உள்ள ஒரு ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஷகாபத் அலி 14, மற்றும் அவரது உறவினர் சபீனா கவுசர் 11, ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

திடீர் வெள்ளத்தில் சிக்கிய சைமா 10, வை, உள்ளூர் தன்னார்வலர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் ஆபத்தான பகுதிகளில் இருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us