ADDED : ஜூன் 10, 2025 10:20 PM
புதுடில்லி:டில்லி பல்கலைக்கழகத்தின் நிலவியல் துறையில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
டில்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் உள்ள நிலவியல் துறையில் நேற்று மாலை 5:15 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த அறையில் இருந்த கம்ப்யூட்டர்கள் மற்றும் ரசாயன கூட்டம் தீயில் நாசமானது. தகவல் கிடைத்து அங்கு சென்ற ஆறு தீயணைப்பு வண்டிகள், தீயை அணைத்து பரவ விடாமல் செய்தன.