Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/பெண் மேலாளர் மரண வழக்கு: ஆதித்யா தாக்கரே மீது புதிய புகார்

பெண் மேலாளர் மரண வழக்கு: ஆதித்யா தாக்கரே மீது புதிய புகார்

பெண் மேலாளர் மரண வழக்கு: ஆதித்யா தாக்கரே மீது புதிய புகார்

பெண் மேலாளர் மரண வழக்கு: ஆதித்யா தாக்கரே மீது புதிய புகார்

ADDED : மார் 25, 2025 04:36 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: திஷா சாலியன் மரண வழக்கில், சிவசேனா உத்தவ் அணியின் எம்.எல்.ஏ.,வும் மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மகனுமான ஆதித்யா தாக்கரே உள்ளிட்டோர் மீது புதிய புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேனேஜரான திஷா சாலியன், 2020 ஜூனில் மும்பையில் உயர்மட்ட கட்டிடத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.

திஷா சாலியன் மரணத்திற்கு சில நாட்களுக்குப் பிறகே சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை நடந்தது. இது பரவலான கற்பனைக் கதைகள் மற்றும் சதிக் கோட்பாடுகளுக்கு வழிவகுத்தது. காவல் துறை ஆரம்பத்தில் இதை தற்கொலை என்று அறிவித்தாலும், சில குழுக்கள் சி.பி.ஐ., விசாரணை கோரி, உண்மை மறைக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டின.

இந்த புகாரில், விசாரணையில் தவறுகள் இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு, அவரது மரணம் தற்செயலானதா அல்லது சதித்திட்டம் இருந்ததா என மீண்டும் விசாரணை நடத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதற்கு முன்பு பா.ஜ., தலைவர்கள் ஆதித்யா தாக்கரேவுக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தனர். இதை அவரும் அவரது கட்சியும் கடுமையாக மறுத்துள்ளனர்.

திஷா சாலியனின் தந்தையின் வழக்கறிஞர், மும்பை காவல்துறையில் வழக்கு தொடர்ந்துள்ளார். புகாரில், ஆதித்யா தாக்கரே, நடிகர்கள் டினோ மோரியா மற்றும் சூரஜ் பஞ்சோலி மற்றும் அவரது மெய்க்காப்பாளரான முன்னாள் உயர் போலீஸ் அதிகாரி பரம்பீர் சிங், மும்பை காவல்துறை அதிகாரி சச்சின் வாசே மற்றும் ரியா சக்ரவர்த்தி ஆகியோரின் பெயர்களை அவர் குறிப்பிட்டுள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய புகார் மும்பை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, புதிய விசாரணை கோரப்பட்டுள்ளது.

ஆரம்ப விசாரணையில் ஈடுபட்ட காவல் துறை அதிகாரிகள் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன, இதில் விசாரணை குறைகள் இருந்தன என சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.இந்த வழக்கை மையமாக வைத்து பா.ஜ., மற்றும் சிவசேனா உத்தவர் அணி இடையே அரசியல் வாதங்கள் நடந்து வருகின்றன.

இந்த புதிய புகார், மகாராஷ்டிர அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us