Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/விவசாயிகளின் நலனுக்கே முன்னுரிமை: மத்திய விவசாய அமைச்சர் உறுதி

விவசாயிகளின் நலனுக்கே முன்னுரிமை: மத்திய விவசாய அமைச்சர் உறுதி

விவசாயிகளின் நலனுக்கே முன்னுரிமை: மத்திய விவசாய அமைச்சர் உறுதி

விவசாயிகளின் நலனுக்கே முன்னுரிமை: மத்திய விவசாய அமைச்சர் உறுதி

ADDED : ஜூன் 08, 2025 04:59 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி:அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளில், இந்திய விவசாயிகளின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து முழுமையாக பாதுகாப்பு அளிக்கப்படும் என்று மத்திய விவசாய துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உறுதி அளித்தார்.

அமெரிக்க விவசாய மற்றும் தோட்டக்கலைப் பொருட்களுக்கு அதிக சந்தை அணுகலுக்கான அமெரிக்காவின் அழுத்தத்திற்கு மத்தியில் இந்தியா, நமது விவசாயிகளை எவ்வாறு பாதுகாக்கும் என்ற கேள்விக்கு பதில் அளித்தார்.

அப்போது சிவராஜ்சிங் சவுகான் அளித்த பேட்டி:

விவசாய சந்தை அணுகல் தொடர்பாக அமெரிக்காவுடன் நடந்து வரும் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் சாத்தியமான லாப நஷ்டங்களை மதிப்பிடும் அதே வேளையில், நமது விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

நமது விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதே எங்கள் முன்னுரிமை. இது போன்ற சந்தர்ப்பங்களில் இந்தியா கண்களை மூடிக்கொண்டு வேலை செய்யாது. நமது லாபங்கள் மற்றும் இழப்புகளை மதிப்பிடு செய்வது அவசியமானது.

அதை மனதில் வைத்தே எந்த ஒரு ஒப்பந்தமும் இறுதி செய்யப்படும்.

இவ்வாறு சிவராஜ் சிங் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us