Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/கொஞ்சம் அழுத்தம் கொடுத்தாலும்... சொல்கிறார் ராகுல்

கொஞ்சம் அழுத்தம் கொடுத்தாலும்... சொல்கிறார் ராகுல்

கொஞ்சம் அழுத்தம் கொடுத்தாலும்... சொல்கிறார் ராகுல்

கொஞ்சம் அழுத்தம் கொடுத்தாலும்... சொல்கிறார் ராகுல்

ADDED : ஜூன் 03, 2025 08:07 PM


Google News
Latest Tamil News
போபால்: கொஞ்சம் அழுத்தம் கொடுத்தாலும் பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்.,க்கு பயம் வரும் என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

ம.பி., மாநிலம் போபாலில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் ராகுல் பேசியதாவது: நாட்டில் தற்போது சித்தாந்தப் போர் நடந்து வருகிறது. ஒரு பக்கம் காங்கிரசும், அரசியல் அமைப்பும் உள்ளன. மறுபுறம், பா.ஜ.,வும், அர்எஸ்எஸ் அமைப்பும் உள்ளன. இவை அரசியலமைப்பை முடிவுக்கு கொண்டு வர விரும்புகின்றன. படிப்படியாக இந்தியாவின் அனைத்து அமைப்புகளையும் அவர்கள் கைப்பற்றி நாட்டுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுத்துகிறார்கள்.

இரண்டாவது போர் சமூக நீதிக்கானது. ஜாதிவாரி கணக்கெடுப்பை நிறைவேற்ற நான் பாடுபடுவேன் என்று லோக்சபாவில் நாட்டிற்கு உறுதி அளித்தேன். பா.ஜ., மற்றும் ஆர்எஸ்எஸ் பற்றி எனக்கு நன்றாக தெரியும். நீங்கள் அவர்கள் மீது கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால் அவர்கள் பயப்படுவார்கள்.

அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை மீறி 1971ல் பாகிஸ்தானை இந்தியா உடைத்தது. வல்லரசுகளுக்கு எதிராக காங்கிரஸ் போராடுகிறது. அவர்களுக்கு தலைவணங்குவது கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us