Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/மின்சார இன்ஜின் டெண்டர்: காங்., குற்றச்சாட்டிற்கு ரயில்வே அமைச்சகம் மறுப்பு

மின்சார இன்ஜின் டெண்டர்: காங்., குற்றச்சாட்டிற்கு ரயில்வே அமைச்சகம் மறுப்பு

மின்சார இன்ஜின் டெண்டர்: காங்., குற்றச்சாட்டிற்கு ரயில்வே அமைச்சகம் மறுப்பு

மின்சார இன்ஜின் டெண்டர்: காங்., குற்றச்சாட்டிற்கு ரயில்வே அமைச்சகம் மறுப்பு

ADDED : ஜூன் 23, 2025 10:35 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: மின்சார இன்ஜின்களுக்கான டெண்டர் செயல்முறை வெளிப்படையானது, காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுகள் தவறானது என்று ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம், இந்தியாவின் மின்சார ரயில் மாற்றத்திற்கு முக்கியமானது. ஆல்ப்ஸ், சீமென்ஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்றன. இந்நிலையில் , ஒப்பந்தத்தை வழங்குவதில் சீமென்ஸ் நிறுவனத்திற்கு, ரயில்வே அமைச்சகம் தேவையற்ற சலுகை அளித்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்தது.

இதனை தொடர்ந்து ரயில்வே அமைச்சகம், காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக ரயில்வே வாரியத்தின் தகவல் மற்றும் விளம்பர நிர்வாக இயக்குனர் திலீப் குமார் கூறியதாவது:

9,000 ஹச்.பி., மின்சார இன்ஜின்களை தயாரித்து பராமரிப்பதற்கான டெண்டர் வெளிப்படையான முறையில் செயல்படுத்தப்பட்டது. யாருக்கும் சலுகை அளிக்கவில்லை. பொறிகள் மிகவும் நவீனமானவை, இது எரிசக்தி சேமிப்பு மற்றும் சுற்றுச்சூழல் நட்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இந்திய ரயில்வேயின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே மற்றும் தாஹோட்டில் மின்சார இன்ஜின்களின் உற்பத்திக்கு எதிராக பல்வேறு தவறான குற்றச்சாட்டுகள் தகவல்கள் பரப்பப்படுகின்றன.

இவ்வாறு திலீப் குமார் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us