Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/பொருளாதார நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்: ஜெய்சங்கர்

பொருளாதார நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்: ஜெய்சங்கர்

பொருளாதார நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்: ஜெய்சங்கர்

பொருளாதார நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்: ஜெய்சங்கர்

UPDATED : செப் 08, 2025 10:12 PMADDED : செப் 08, 2025 10:10 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: பொருளாதார நடவடிக்கைகள் வெளிப்படையானதாகவும், நேர்மையானதாகவும் இருக்க வேண்டியது முக்கியம், '' என பிரிக்ஸ் அமைப்பு மாநாட்டில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவ தால் கடுப்பான அமெ ரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்தார். இதே போல, தென் அமெரிக்க நாடான பிரேசிலில் இருந்து இறக்குமதியா கும் பொருட்களுக்கும் 50 சதவீத வரி விதித்தார்.அமெரிக்க வரி விதிப்பு குறித்து விவாதிக்க, பிரிக்ஸ் அமைப்பில் இடம் பெற்றுள்ள பிரேசில் அதிபர் லுலா டா சில்வா தலைமையில், இன்று( செப்.,09) பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு, 'வீடியோ கான் பரன்ஸ்' வாயிலாக நடக்கிறது. இதில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.

இம்மாநாட்டில் ஜெய்சங்கர் பேசியதாவது: உலகம் ஒரு கூட்டாக வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான நிலையான மற்றும் கணிக்கக்கூடிய சூழலைத் தேடுகிறது. அதேநேரத்தில் பொருளாதார நடவடிக்கைகள் நியாயமானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும். சர்வதேச வர்த்தகத்தில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வரும் நிலையில் மிகவும் உறுதியிான விநியோக சங்கிலியை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.பல்வேறு இடையூறுகள் இருக்கும் நேரத்தில், அத்தகைய அதிர்ச்சிகளுக்கு எதிராக நமது நடவடிக்கை இருப்பதே நோக்கமாக இருக்க வேண்டும்.

மிகவும் மீள்தன்மை கொண்ட, நம்பகமான, தேவையற்ற மற்றும் குறுகிய விநியோகச் சங்கிலிகளை உருவாக்க வேண்டும். நிலையான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு உலகிற்கு ஆக்கபூர்வமான மற்றும் கூட்டுறவு அணுகுமுறைகள் தேவை .

தடைகள் அதிகரிப்பதும், பரிமாற்றத்தை சிக்கலாக்குவதும் எந்த பலனும் அளிக்காது. வர்த்தக பிரச்னைகளுடன் வர்த்தகம் அல்லாத பிரச்னைகளை இணைக்கக் கூடாது. சர்வதேச வர்த்தகமானது, திறந்த , நியாயமான, வெளிப்படையான, பாகுபாடற்ற, உள்ளடக்கிய, சமத்துவமான விதிகளை சார்ந்த அணுகுமுறைகளை அடிப்படையாக கொண்டதாக இருக்கவேண்டும். இதனை பாதுகாக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us