Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ சத்தீஸ்கரில் தொடரும் என்கவுன்டர்; நக்சலைட் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் தொடரும் என்கவுன்டர்; நக்சலைட் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் தொடரும் என்கவுன்டர்; நக்சலைட் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் தொடரும் என்கவுன்டர்; நக்சலைட் சுட்டுக்கொலை

ADDED : மே 23, 2025 12:21 PM


Google News
Latest Tamil News
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நக்சலைட் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

நக்சல் ஆதிக்கம் மிகுந்த சத்தீஸ்கர், தெலுங்கானா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், ' ஆபரேஷன் பிளாக்பாரஸ்ட்' என்ற பெயரில், மத்திய மாநில அரசுகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன், நாராயண்பூர் மாவட்டத்தின் அபுஜ்மத் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், நக்சல் அமைப்பின் மூத்த தலைவர் கேசவ ராவ் எனப்படும் பசவராஜூ உள்ளிட்ட 27 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், சுக்மா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட ரிசர்வ் போலீசார், சிறப்பு அதிரடிப்படை போலீசார் அடங்கிய கூட்டுக்குழுவினர், அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நக்சலைட் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

''பாதுகாப்புப் படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே இடைவிடாத துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது. அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடக்கிறது'' என சுக்மா மாவட்ட போலீசார் தெரிவித்தனர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us