சத்தீஷ்கர் மது கொள்முதல் ஊழல்: மாஜி முதல்வர் மகன் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை
சத்தீஷ்கர் மது கொள்முதல் ஊழல்: மாஜி முதல்வர் மகன் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை
சத்தீஷ்கர் மது கொள்முதல் ஊழல்: மாஜி முதல்வர் மகன் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை
ADDED : செப் 15, 2025 10:16 PM

ராய்ப்பூர்: சத்தீஷ்கரில் மதுகொள்முதலில் நடந்த ரூ. 2,100 கோடிஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் மகன் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்செய்தது.
சத்தீஷ்கர் மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வர் பூபேஷ்பாகேல் கடந்த 2019-22ம் ஆண்டுகளில் ஆட்சியின் போது மது கொள்முதலில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதில் ரூ பல கோடி , பூபேஷ் பாகேல் மகன் சைதன்யாவுக்கு தொடர்புடைய நிறுவனங்களுக்கு கைமாறியதாக கூறப்பட்டது. கிட்டத்தட்ட ரூ. 2,100 கோடிக்கு மதுபான ஊழல் நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறது.
இந்த ஊழலில் முன்னாள் முதல்வர் பூபேஷ்பாகேலின் மகன் சைதன்யா கடந்த ஜூலையில் கைது செய்யப்பட்டார். வழக்கை ராய்ப்பூர் மாவட்ட கூடுதல் நீதிபதி தாமோதர் சவுகான் விசாரணை நடத்தி வருகிறார். இந்த வழக்கில் இன்று அமலாக்கத்துறை 7,039 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல்செய்துள்ளது. இதில் பூபேஷ் பகேல் மகன் சைதன்யா முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே மாநில பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் உதவியுடன் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.