Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ பெங்களூரு நெரிசலில் 11 பேர் பலி; ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 3 பேர் சஸ்பெண்ட்

பெங்களூரு நெரிசலில் 11 பேர் பலி; ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 3 பேர் சஸ்பெண்ட்

பெங்களூரு நெரிசலில் 11 பேர் பலி; ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 3 பேர் சஸ்பெண்ட்

பெங்களூரு நெரிசலில் 11 பேர் பலி; ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 3 பேர் சஸ்பெண்ட்

ADDED : ஜூன் 28, 2025 01:30 PM


Google News
Latest Tamil News
பெங்களூரு: பெங்களூரு ஐ.பி.எல்., வெற்றி கொண்டாட்ட நிகழ்வில், நெரிசல் ஏற்பட்டு 11 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் தயானந்தா, விகாஸ் குமார், சேகர் ஆகிய மூவரை பணியிடை நீக்கம் செய்ததை உறுதி செய்தது மத்திய அரசு.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த ஆர்.சி.பி., அணியின் பாராட்டு விழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து போலீஸ் கமிஷனர் தயானந்தா உட்பட சில அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இது தொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம் கர்நாடகா அரசு சமர்பித்தது. காங்கிரஸ் அரசை, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்ததுக்கு எதிர்ப்பு கிளம்பியது.

தற்போது, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் தயானந்தா, விகாஸ் குமார், சேகர் ஆகிய மூவரை பணியிடை நீக்கம் செய்ததை உறுதி செய்தது மத்திய அரசு. அதிகாரிகள் மீது 30 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையை வெளியிடுமாறு மாநில அரசுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us