Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ காங்கிரசின் பகல் கனவு நிறைவேறாது என்கிறது பா.ஜ.,

காங்கிரசின் பகல் கனவு நிறைவேறாது என்கிறது பா.ஜ.,

காங்கிரசின் பகல் கனவு நிறைவேறாது என்கிறது பா.ஜ.,

காங்கிரசின் பகல் கனவு நிறைவேறாது என்கிறது பா.ஜ.,

ADDED : ஜூன் 19, 2025 07:07 PM


Google News
லக்னோ:''பாகிஸ்தான் ஆதரவுடன் அதிகாரத்திற்கு வந்து விடலாம் என காங்கிரஸ் யோசிக்கிறது,'' என, உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுர்யா கூறினார்.

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலவும் உறவு குறித்து, காங்கிரஸ் தலைவர்கள் சிலர் ஆட்சேபகரமான வகையில் கருத்து தெரிவித்திருந்தனர். அவற்றிற்கு பதிலளிக்கும் வகையில், பா.ஜ.,வைச் சேர்ந்த, உ.பி., மாநில துணை முதல்வர் கேசவ பிரசாரத் மவுரியா கூறியுள்ளதாவது:

நம் இந்திய தலைவர்களை விட, பாகிஸ்தான் தலைவர்களைத் தான் காங்கிரஸ் அதிகமாக நம்பி வருகிறது. பாகிஸ்தான் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்து விடலாம் என அக்கட்சி எண்ணுகிறது. அந்த பகல் கனவு ஒருபோதும் நிறைவேறாது.

இவ்வாறு மவுரியா கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us